Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் படம் சூப்பர் ஹிட்; அடுத்தபடம் 7 ஆண்டுகள் கழித்து – பாய்ச்சலுக்குத் தயாரான இயக்குனர்!

முதல் படம் சூப்பர் ஹிட்; அடுத்தபடம் 7 ஆண்டுகள் கழித்து – பாய்ச்சலுக்குத் தயாரான இயக்குனர்!
, வியாழன், 15 நவம்பர் 2018 (11:12 IST)
2011 ஆம் ஆண்டு வெளியான மௌனகுரு திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மௌனகுரு படத்தின் இயக்குனர் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது அடுத்த படத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

நடிகர் அருள்நிதியை ஒரு கவனித்தக்க நடிகராகவும் அவருக்கென ஒரு மார்க்கெட்டையும் உருவாக்கிய படம் மௌனகுரு. வித்தியாசமான திரைக்கதை மற்றும் அருமையான கதாபாத்திர வடிவமைப்பால் ட்ரெண்ட்செட்டர் படமாக இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தின் திரைக்கதையைப் பார்த்து வியந்து போன இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இந்த கதையை முறைப்படி அனுமதி வாங்கி இந்தியில் திரைப்படமாக உருவாக்கினார் என்பதே இப்படத்திற்கு ஒரு கிரிடமாகும்.

சினிமா விரும்பிகளால் கொண்டாடப்பட்ட இந்த படத்தின் இயக்குனர் சாந்தகுமார் அதன் பின் 7 ஆண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது 7 வருட இடைவெளிக்குப் பிறகு தனது புதிய படத்தினை இன்று தொடங்கியுள்ளார்.

ஸ்டுடியோக்ரீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு மகாமுனி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அவருடன் மஹிமா நம்பியார், இந்துஜா, அருள்தாஸ், ஜி எம் சுந்தர், காளிவெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமன் இசையமைப்பாளராகவும் அருண் பத்மநாபன் ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

மௌனகுரு படத்தைப் போலவே இந்தப் படமும் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சையை திசைதிருப்பதான் பேட்ட போஸ்டரா?