Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டாரு... பாய் பிரண்ட் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!

வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டாரு... பாய் பிரண்ட் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!
, வெள்ளி, 23 ஜூன் 2023 (14:54 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். தான் நடித்த மகாநடி படத்துக்காக தேசிய விருது பெற்றவர்.
 
ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகர் ஒருவர் அவரை பெண் கேட்டு அம்மா வீட்டுக்கே சென்றதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதுமட்டும் அல்லாது தன்னை கணவனாகவே பாவித்துக்கொண்டு சென்னை வீட்டிற்கு வந்து உதயநிதி கூடலாம் ஏன் படம் பண்றா அவ? என என் வேலையாட்களிடம் கேட்டுள்ளார். இதெல்லாம் கேட்டால்... அடேய் யாருடா நீங்களா என தான் கேட்கத்தோணுது? 
 
 
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி நண்பர் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடராஜனின் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய யோகிபாபு! வைரல் புகைப்படங்கள்..!