Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜப்பானிலும் சாதனை படைத்த ‘பாகுபலி 2’

ஜப்பானிலும் சாதனை படைத்த ‘பாகுபலி 2’
, புதன், 11 ஏப்ரல் 2018 (14:03 IST)
ஜப்பானில் திரையிடப்பட்ட ‘பாகுபலி 2’, 100 நாட்களைக் கடந்து ஓடி வருகிறது.

 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான படம் ‘பாகுபலி 2’. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகளிலும் இந்தப் படம் ரிலீஸானது. 1500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த முதல் இந்தியப் படம் என்ற பெயரைப் பெற்றது இந்தப் படம்.
 
‘பாகுபலி 2’, ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி ரிலீஸானது. 100 நாட்களைக் கடந்து இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 15வது வாரத்தின் முடிவில் 1.3 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்துள்ளது ‘பாகுபலி 2’.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிபிராஜின் அடுத்த படம்