Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: கோவாவிடம் தோல்வியடைந்த சென்னை அணி

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: கோவாவிடம் தோல்வியடைந்த சென்னை அணி
, ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (12:04 IST)
.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி கோவா அணியிடம் தோல்வியடைந்தது.

 
ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடரில் நேற்று நடப்புச் சாம்பியனான சென்னை எப்.சி. அணி கோவா எப்.சி. அணியை எதிர்கொண்டது. இரண்டு அணிகளுமே வலுவான அணி என்பதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

கோவா அணி சிறப்பாக விளையாடி 3 - 0 கோல்களை அடித்து முன்னிலை வகித்தது. கடுமையாக விளையாடிய சென்னை அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை.

இருப்பினும் கடைசி நேரத்தில் சென்னை அணியின் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார்.

இறுதியில் 3-1 என்ற கணக்கில் கோவா அணி சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடிய சென்னை எப்.சி அணி 2 போட்டியிலுமே தோல்வியைத் தழுவி பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ளது.

 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்று நாள்களில் முடிந்தது முதல் டெஸ்ட் –இந்தியா இன்னிங்ஸ் வெற்றி