Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை: டிராவிட் அதிரடி!!

தோனியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை: டிராவிட் அதிரடி!!
, செவ்வாய், 31 அக்டோபர் 2017 (12:38 IST)
தோனி விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை அவரது முடிவுகளை அவரே தீர்மானிப்பார் என முன்னாள் இந்திய அணி கேப்டன் டிராவிட் தெரிவித்துள்ளார்.


 
 
இந்திய அணியின் வெற்றி கேப்டன் என அழைக்கப்படும் தோனியின் மீது தற்போது பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் தோனி கூலாகவே காணப்படுகிறார்.
 
முன்னர் தன் மீது எழுந்த விமர்சனங்கள் காரணமாகவே தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். தனது கேப்டன் பதவியையும் துறந்தார். தற்போது கோலி தலைமையில் இந்திய அணி செயல்பட்டு வருகிறது.
 
இருப்பினும் தோனி விஷயத்தில் அணிக்குள் அரசியல் நடப்பதாகவே செய்திகள் வெளியாகின்றன. தற்போது, 2019 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்பாரா? அவர் தனது ஓய்வை எப்போது அறிவிப்பார் என விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. 
 
இந்நிலையில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் டிராவிட் இது குறித்து கடுத்து தெரிவித்துள்ளார். டிராவிட் கூறியதாவது, தோனி குறித்து பலருக்கு பல கருத்துகள் உள்ளது. ஆனால் என்னை பொறுத்த வரையில் தேர்வுக்குழுவினர் அவரை தேர்வு செய்யும் வரை அவர் இந்திய அணிக்காக விளையாடும் தகுதி உள்ளவர்.
 
ஆனால் ஓய்வு குறித்த முடிவை எடுக்கும் தகுதி தோனி ஒருவருக்கு மட்டுமே உள்ளது. அவரை ஓய்வு பெற யாரும் கட்டாயப்படுத்த முடியாது. வேறு யாருக்கும் இது குறித்து விமர்சிக்க தகுதி இல்லை என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 நாளில் சச்சின் சாதனையை முறியடித்த கோலி