Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டெர்லைட்டை திறந்தே தீருவோம்: மார்தட்டும் அதிகாரி; முட்டாளாக்கப்பட்ட மக்கள்

ஸ்டெர்லைட்டை திறந்தே தீருவோம்: மார்தட்டும் அதிகாரி; முட்டாளாக்கப்பட்ட மக்கள்
, வியாழன், 20 டிசம்பர் 2018 (16:27 IST)
ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறப்போம் என ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் கூறியிருக்கிறார்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடத்தி அது கலவரமாக மாறி 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டு அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
 
இதை எதிர்த்து வேதாந்தா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வந்தது. ஆனால், தமிழக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து வேதாந்தா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத, ஸ்டெர்லைட் ஆலை இரு மாதங்களில் திறக்கப்படும். இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம். கண்டிப்பாக ஆலையை திறப்போம் என கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலாத்காரம் செய்யப்பட்டாரா இளம்பெண்? புதுக்கோட்டையில் கோரம்