Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணமாகி 2 ஆண்டுகள் கழித்து தனது பழைய காதலனோடு சேர்ந்த பெண்

திருமணமாகி 2 ஆண்டுகள் கழித்து தனது பழைய காதலனோடு சேர்ந்த பெண்
, புதன், 10 அக்டோபர் 2018 (18:30 IST)
பெற்றோரின் வற்புறுத்தலால் தனது காதலனை விட்டுவிட்டு வேறொருவரை மணந்து கொண்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெண் தற்போது தனது காதலனோடு சேர்ந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஏர்வாடியைச் சேர்ந்தவர் நளாயினி. இவர் தன்னோடு கல்லூரியில் படித்த வெண்ணிலவன் என்பவரைக் காதலித்துள்ளார். இதையறிந்த நளாயினின் பெற்றோர் அவரின் விருப்பத்திற்கு மாறாக ஆனந்த் பிரகாஷ் என்பவரோடு 2016 ஆம் ஆண்டு கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர். நளாயினியை மணந்த ஆனந்த் பிராகாஷ் ஒரு திருமணம் ஆன ஒரு மாதத்தில் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு தற்போது தனது மனைவியையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதற்கான விமான டிக்கெட் மற்றும் விசாவை ஆனந்த் பிரகாஷ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி முதல் நளாயினியைக் காணவில்லை. இதனால் நளாயினியின் கணவர் வீட்டினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் மேல் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நளாயினியைத் தேடிய போது அவர் தனது காதலன் வெண்ணிலவனுடன் இருப்பது தெரிய வந்தது. இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீஸார் உறவினர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நளாயினி உறவினர்களோடு பேச மறுத்தது மட்டுமில்லாமல் தனது காதலன் வெண்ணிலவனுடன் செல்லவே விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இதைக் கேட்டு கோபமடைந்த நளாயினின் கணவனின் உறவினர்கள் காவலிலையத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் காவல்துறையினர் அவர்களைக் கடுமையாக எச்சரித்து அனுப்பிவிட்டு நளாயினியை அவரது காதலனோடு அனுப்பி வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொய்யை நம்பி ஓட்டு: மக்களை முட்டாள் ஆக்கும் மோடி அரசு