Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனிக்கிழமை ரம்ஜான்: நாளை பள்ளி விடுமுறை ரத்து

சனிக்கிழமை ரம்ஜான்: நாளை பள்ளி விடுமுறை ரத்து
, வியாழன், 14 ஜூன் 2018 (22:36 IST)
"தமிழகத்தில் ரம்ஜான் :பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடப்படும் என்றும் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் அதாவது வரும் சனிக்கிழமை தான் ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால் சனிக்கிழமை தான் ரம்ஜான் பண்டிகை என்பது உறுதியாகியுள்ளது.
 
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாளை பள்ளிகள் விடுமுறை என்று ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் அறிவித்திருந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக வரும் சனிக்கிழமை விடுமுறை என அறிவித்துள்ளது. இதற்கான அரசாணைகளையும் தமிழக, புதுச்சேரி அரசுகள் வெளியிட்டுள்ளன
 
இதனையடுத்து நாளை வழக்கம்போல் அலுவலகங்கள், பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் .மூன்று நாட்கள் விடுமுறை என நினைத்து பலரும் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்தும், கிளம்ப உள்ள நிலையில் இந்த விடுமுறை ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடலூர் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி! மன அழுத்தம் காரணமா?