Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'மீடூ'வால் அப்பாவி ஆண்கள் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது: சுசி கணேசன்

'மீடூ'வால் அப்பாவி ஆண்கள் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது: சுசி கணேசன்
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (19:56 IST)
வைரமுத்து-சின்மயி விவகாரம் தற்போது தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதே 'மீ டூ'வில் மேலும் சில பெண்கள் தங்களுக்கும் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டதாக கூறி வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் கவிஞர் லீலா மணிமேகலை

கவிஞர் லீலா மணிமேகலை தனது டுவிட்டர் பக்கத்தில் திருட்டுப்பயலே இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதோடு, சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறிய இயக்குனர் சுசி கணேசன், 'லீனா மணிமேகலை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம், மேலும் மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன் மீ டூ இயக்கத்தில், அப்பாவி ஆண்கள் தன் பக்க நியாயத்திற்கு போராடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று கூறியுளார்.

webdunia
மேலும் லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது தவறான புகார் அளித்துள்ளார். அவரது புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை' என்றும் அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பூரில் ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது