Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலியை போட்டுத்தள்ளிய காதலன்: அதிரவைக்கும் பின்னணி

காதலியை போட்டுத்தள்ளிய காதலன்: அதிரவைக்கும் பின்னணி
, சனி, 3 நவம்பர் 2018 (09:58 IST)
கும்பகோணத்தில் காதலன் காதலியை கொன்றதற்கான அதிர்ச்சிகர காரணத்தை கூறியுள்ளான்.
 
கும்பகோணத்தில் உள்ள திருவடைமருதூரில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் 24 வயதான வசந்த பிரியா. இவரும் நந்தகுமார் என்பரும் காதலித்து வந்துள்ளதகாக தெரிகிறது. 
 
இவர்களது காதலுக்கு வசந்த பிரியாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் பிரியா தனது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதனால் விரக்தியில் இருந்த நந்தகுமார், வசந்தபிரியாவை சந்திக்க வேண்டும் என கெஞ்சியுள்ளார். இதனால் மனமிறங்கிய வசந்தபிரியா நந்தகுமாருடன் பைக்கில் சென்றுள்ளார். 
 
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற நந்தகுமார், பிரியாவிடம் நீ என்னைதான் திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நந்தகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எழுத்து வசந்தபிரியாவில் கழுத்தை அறுத்து கொன்றான்.
webdunia
 
இந்நிலையில் போலீஸார் அவனை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பல வருடங்களாக பிரியாவை காதலித்து வந்தேன். திடீரென என்னை வேண்டாம் என கூறிவிட்டாள். எவ்வளவு தான் கெஞ்சியும் அவள் என் பேச்சை கேட்காமல் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்வேன் என கூறியதால் அவளின் கழுத்தை அறுத்துக் கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழை எதிரொலி: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை