Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல்..எந்த தொகுதியில் தெரியுமா?

rakulgandhi

sinoj

, செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (15:17 IST)
கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில்  மீண்டும் போட்டியிட உள்ள நிலையில்  நாளை மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்த நிலையில்,   மக்களவை தேர்தலில் போட்டியிட நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் ராகுல் காந்தி.
 
அதன்படி கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில்  மீண்டும் போட்டியிட உள்ள நிலையில்  நாளை மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி.
webdunia
வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல் வெளியாகிறது.
 
இத்தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார். ஏப்ரல் 26 ஆம் தேதி 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வய நாடும்  ஒன்று. மேலும்  கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர்- பிரதமர் மோடி