Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர் மீது வழக்குப்பதிவு.. குழந்தை பலியானதால் நடவடிக்கை..!

தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர் மீது வழக்குப்பதிவு.. குழந்தை பலியானதால் நடவடிக்கை..!

Mahendran

, புதன், 1 மே 2024 (12:54 IST)
சென்னையில் செவிலியர் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நிலையில் அந்த குழந்தை பலியானதாகவும் இதன் அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையை சேர்ந்த செவிலியர் ஒருவர் திருமணமாகாமல் கர்ப்பமான நிலையில் குழந்தையை யாருக்கும் தெரியாமல் பெற்றெடுத்து மறைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர் தனக்கு தானே பிரசவம் பார்த்த நிலையில் எதிர்பாராத வகையில் அந்த குழந்தை பலியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க காவல்துறையினர் விரைந்து வந்து செவிலியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் செவிலியர் கர்ப்பத்திற்கு காரணமான அவருடைய காதலரை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தையை யாருக்கும் தெரியாமல் பெற்றெடுத்து மறைக்க திட்டமிட்டாரா அல்லது தனக்குத்தானே பிரசவம் பார்ப்பதற்கு வேறு ஏதேனும் காரணமா? உட்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் கோடி ஹெராயின் திடீர் மாயம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!