Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் முதல்வரானால் போடும் முதல் கையெழுத்து இதுதான்: கமல்ஹாசன்

நான் முதல்வரானால் போடும் முதல் கையெழுத்து இதுதான்: கமல்ஹாசன்
, செவ்வாய், 27 மார்ச் 2018 (18:01 IST)
திரையுலகில் இருந்து முதல்வர் கனவுடன் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று நடைபெற்ற கல்லூரி மாணவர்களிடையான உரையாடலில் தான் முதல்வரானதும் போடும் முதல் கையெழுத்து குறித்து குறிப்பிட்டுள்ளார்.

பொன்னேரி அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்று மாணவர்களிடையே உரையாடிய கமல், மாணவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர், 'நீங்கள் முதல்வரானது போடும் முதல் கையெழுத்து எது? என்று கேட்டபோது, 'லோக் ஆயுக்தா' என்று பதிலளித்தார். இதே வாக்குறுதியை கடந்த சில வருடங்களுக்கு முன் பாமகவின் அன்புமணி அளித்திருந்தார் என்பதும் ஆனால் அவரது கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

webdunia
லோக் ஆயுக்தா என்பது ஊழலுக்கு எதிராக விசாரணை செய்யும் ஒரு மாநில நீதியமைப்பாகும். இந்த அமைப்புக்கு ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே சம்மன் அனுப்பி விசாரிக்கும் அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் அதிமுக, திமுக அரசுகள் லோக் ஆயுக்தாவை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவேக் ஜெயராமன் சட்டப்படிப்பில் முறைகேடு - துணைவேந்தர் மீது வழக்குப்பதிவு