Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Siva

, வியாழன், 9 மே 2024 (09:18 IST)
தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது என்பதும் நேற்று கூட சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது என்பதையும் பார்க்கவும்.

ஒரு பக்கம் 100° பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கோடை மழை பெய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்றும் தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் நாய் கடித்து பெண் ஒருவர் காயம்.. நாய்களால் ஏற்படும் தொடர் பிரச்சனைகள்..!