Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளக்காதலியின் கள்ளக்காதலால் கடுப்பான கள்ளக்காதலன்

கள்ளக்காதலியின் கள்ளக்காதலால் கடுப்பான கள்ளக்காதலன்
, வெள்ளி, 16 நவம்பர் 2018 (08:20 IST)
கரூரில் கள்ளக்காதலி மீது சந்தேகப்பட்ட கள்ளக்காதலன் அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த லீலா என்ற பெண்ணுக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். லீலாவின் கணவர் இறந்துவிட்டதால், குடும்பத்தை காப்பாற்ற லீலா கட்டிட வேலைக்கு சென்றுள்ளார்.
 
வேலைக்கு சென்ற இடத்தில் லீலாவிற்கு நடராஜன் என்ற தொழிலாலியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின அது கள்ளக்காதலாக மாறி இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர்.
 
இந்நிலையில் லீலா நடராஜன் அல்லாது வேறு சில நபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனையறிந்த நடராஜன் லீலாவை கண்டித்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நடராஜன் லீலாவை வெட்டி கொலை செய்தார்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், லீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளி நடராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று நடைதிறப்பு –சபரிமலை சாலைகளை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போலிஸ்