Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் 7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞன்

சென்னையில் 7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞன்
, வெள்ளி, 13 ஜூலை 2018 (10:19 IST)
சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளான்.
சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு சிறுமிகளை பாலியல் கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என அறிவித்த பிறகும் இந்த கொடூரம் குறைந்த பாடில்லை.
 
சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள அரசுப் பள்ளியில் சிறுமி ஒருவர் 7 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அவர் பள்ளி முடிந்த பிறகு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் யாரும்மில்லாததையறிந்த அப்பகுதி இளைஞன் ஒருவன், சிறுமியின் வீட்டினுள் நுழைந்து சிறுமியிடம் தப்பாக நடக்க முயன்றுள்ளார்.
 
பயந்துபோன சிறுமி அலறி கூச்சலிடவே அருகிலிருந்தவர்கள் அந்த கொடூரனிடமிருந்து சிறுமியை மீட்டனர். பின் அந்த காமுகனை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அந்த அயோக்கியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்த பெண் - மருத்துவரை கொலை செய்த அவலம்