Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’ஏடிஎம்’ கார்டை உடைத்துப் போட வேண்டியதுதான் ! வங்கி அதிகாரிகள் தகவல்

’ஏடிஎம்’ கார்டை உடைத்துப் போட வேண்டியதுதான் ! வங்கி அதிகாரிகள் தகவல்
, செவ்வாய், 18 டிசம்பர் 2018 (10:22 IST)
நவீனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அது மக்களுக்கு பயனுடையதுதான். அந்த வகையில் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்துவோர் இனிமேல் மேக்னடிக் ஸ்டிரிப் முறையிலான டெபிட் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்றும். அதற்குப் பதிலாக சிப் பொருத்தப்பட்ட புதிய கார்டுகளை வரும் ஜனவரி முதல் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் புதிய சிப் கார்டுகள் ஆக்டிவேட் செய்தாலும் கூட பழைய மேக்னெடிக் ஸ்டிரிப் கார்டுகள் செயலிழந்துவிடும் என்று வங்கி சார்பில் கூறப்பட்டது.
 
இந்நிலையில் புதிய  சிப் கார்டுகளைப் பெற்றும் கூட பழைய கார்டுகளில் பணம் வருவதாகவும் ,கார்டுகள் தொலைந்துபோனால் பணம் கள்வாடப்பட வாய்ப்புள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் அளித்த வண்ணம் இருந்தனர்.
 
இதனையடுத்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது : வங்கி வாடிக்கையாளர்கள் புதிய சிப் கார்டுகளை பயன்படுத்த ஆரம்பித்ததும் பழைய கார்டுகள் தானாக செயலிழந்துவிடும். ஆனால் சில சமயங்களில் தொழில்நுட்பக்கோளாறுகல் காரணமாக பழைய கார்டுகள் செயலிழக்காமல் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் புதிய சிப் கார்டுகள் ஆக்டிவேட் ஆனதும் பழைய ஏடிஎம் கார்டை உடைத்துப் போட்டுவிட்டால் வாடிக்கையாளர்கள் பயமில்லாமல் இருக்கலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலக்கு கலக்குன்னு கலக்கிய ஸ்டாலின்: மிரண்டுபோன வடமாநிலம்; அடுத்த மூவ் என்ன?