Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி கோவிலில் ஏப்ரல் மாத காணிக்கை.. ரூ.100 கோடியை தாண்டியதாக தகவல்..!

tirupathi

Mahendran

, வெள்ளி, 3 மே 2024 (11:09 IST)
திருப்பதி கோவிலில் ஒவ்வொரு மாதமும் கோடி கணக்கில் காணிக்கை கிடைத்து வரும் நிலையில் ஏப்ரல் மாத காணிக்கை மற்றும் 100 கோடி ரூபாயை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்று என்று கூறப்படும் திருப்பதி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்றும் லட்சக்கணக்கில் பக்தர்கள் காணிக்கை அளித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்தது. 
 
அந்த வகையில் ஏப்ரல் மாத காணிக்கை எண்ணப்பட்ட நிலையில் தற்போது 101.63 கோடி ரூபாய் ஏப்ரல் மாதத்தில் மட்டும் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
 
மேலும்  ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20.17 லட்சம் பக்தர்கள்  சாமி தரிசனம் செய்ததாகவும் பக்தர்களுக்கு 94.22 லட்சம் லட்டுக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் காணிக்கை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய ஜெர்மனி செல்லும் சிறப்புப் புலனாய்வுக் குழு.. பரபரப்பு தகவல்..!