Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்களை தாக்காதீர்கள்: இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான்!

எங்களை தாக்காதீர்கள்: இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான்!

எங்களை தாக்காதீர்கள்: இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான்!
, ஞாயிறு, 27 நவம்பர் 2016 (13:10 IST)
எல்லையில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வரும் இந்தியாவிடம் பாகிஸ்தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தாதீர்கள் தாக்குதலை நிறுத்துங்கள் என கெஞ்சியதாக பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.


 
 
கோவாவின் பனாஜி நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய பாதுக்காப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பாகிஸ்தான் ஒரு முறை துப்பாக்கியால் சுட்டால், நாம் அவர்கள் மீது 2 முறை பதில் தாக்குதலை நடத்துவதால் கடந்த 3 நாட்களாக எல்லையில் துப்பாக்கி சத்தம் ஓய்ந்துள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது அதில், இந்திய ராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என அவர்கள் கெஞ்சினார்கள்.
 
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது நமது நோக்கமல்ல ஆனால் நமது நாட்டை யாராவது தீய எண்ணத்துடன் முறைத்தால் அவர்களது கண்ணை தோண்டி அவர்கள் கையில் போடும் அளவுக்கு நமது ராணுவம் பலமாக இருப்பதாக மனோகர் பாரிக்கர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஃபர் என கூறி மக்களை ஏமாற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள்!