Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'வாவ் ’சொல்ல வைக்கும் நியூ மெர்சிடஸ் பென்ஸ் ...

'வாவ் ’சொல்ல வைக்கும் நியூ மெர்சிடஸ் பென்ஸ் ...
, வெள்ளி, 16 நவம்பர் 2018 (17:29 IST)
ஜெர்மெனி நாட்டின் கார்ல் பென்ஸ் உருவாக்கிய பென்ஸ் கார் கம்பெனி இன்று உலகின் சொகுசு காராகவும், பணக்காரர்களின் அந்தஸ்தாகவும் கருதப்படுகிறது.
இந்தியச் சந்தைகளில் மெர்சிடஸ் பென்ஸ் அதிக தாக்கம் செலுத்தி வருகிறது. இதன் புது புது மாடல்கள் மக்களை வசீகரிக்கும் தோற்றத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது சி.எல்.எஸ் 4 - டோர் கூப் என்ற மாடலை  இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாடலின் துவக்கவிலை ரூ.84.7 லட்சமாகும்( எக்ஸ்ஷோரூம் .
 
இந்தியாவில் உள்ள பிரபல மாடல் கார்களுக்கு போட்டியாக இம்மாடல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
இதில் நான்கு பேர் அமரலாம். பிஎஸ் போர் மற்றும் 2.0 லிட்டர் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக வேகத்தில் பயணிப்பவர்களுக்கு ஏற்றதாக இம்மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஜா புயல்: தமிழக அரசை பாரட்டிய கமல்!