Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் சர்ச்சையால் எடுக்கப்பட்ட புதிய முடிவு… காயினுக்கு க்ளோஸ் அப்!

டாஸ் சர்ச்சையால் எடுக்கப்பட்ட புதிய முடிவு… காயினுக்கு க்ளோஸ் அப்!

vinoth

, வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (07:05 IST)
கடந்த 15 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி கேப்டன் பாப் டூ ப்ளெசிஸ், சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கமின்ஸிடம் மும்பை அணி டாஸ் மோசடி செய்ததாக செய்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 11ம் தேதி மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் இடையே போட்டி நடந்தபோது, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் போட்டார். அவர் ஒரு மார்க்கமாக டாஸை பின்னால் போட அதை எடுத்த ஜவகல் ஸ்ரீநாத் மும்பைக்கு சாதகமாக டாஸ் வரும்படி டாஸ் காயினை திருப்பி எடுத்ததாக ஒரு வீடியோவும் வைரலானது. இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான டாஸின் போது டாஸ் காயினுக்கு நேரடியாக கேமரா க்ளோஸ் அப் வைக்கப்பட்டு டாஸின் முடிவு ரசிகர்களுக்கு தெரியும்படி காட்டப்பட்டது. ஐபிஎல் தொடரில் முதல் முறையாக டாஸ் காயின் நேரடியாக ரசிகர்களுக்கு காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யகுமார் & திலக் வர்மா அதிரடி ஆட்டம்… பஞ்சாப்புக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த இலக்கு!