Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கலாமா? ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த சுஸ்மா சுவராஜ்

ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கலாமா? ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த சுஸ்மா சுவராஜ்
, சனி, 26 மே 2018 (21:16 IST)
டுவிட்டரின் ரசிகர்கள் ஆப்கான் வீரர் ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாமா என்ற கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பதிலளித்துள்ளார்.

 
ஐபிஎல் 2018 தொடரில் எல்லோரும் கவனத்தையும் ஈர்த்த ஒரே அணி ஹைதராபாத். இந்த அணியின் பந்துவீச்சுக்கு சென்னை அணியை தவிர மற்ற எல்லா அணிகளும் அடிபணிந்தது. குறிப்பாக ஆப்கான் வீரர் ரஷித்கான் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
 
இவரது பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் எல்லா வீரர்கள் திணறியது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் முக்கியமான தருணத்தில் முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
 
இதனால் இந்தியாவில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாலாமே உருவாகி உள்ளது. இந்நிலையில் டுவிட்டரின் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ரஷித் கானுக்கு இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று டுவிட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர், மோடி மற்றும் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை டேக் செய்து ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாமா என்று கேட்டுள்ளார்.
 
இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பதில் டுவீட் செய்துள்ளார். அதில், எல்லா டுவீட்டுகளையும் பார்த்தேன். இதை உள்துறை அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் சகோதரரே டிவில்லியர்ஸ்.... கோலி ட்விட்...